2025 ஜூலை 19, சனிக்கிழமை

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இரட்டையர்

Freelancer   / 2023 ஜூன் 26 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியபிரதேச மாநிலம் ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள்  . இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இரட்டை சகோதரர்களை  திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் கோலாகலமாக நடைபெற்றது.

இரட்டையர்களின் இந்த இரட்டை திருமணத்தை பார்க்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிக அளவில் குவிந்தனர். திருமணம் நடைபெற்ற இடம் முழுவதும் மலர்கள் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த 2 ஜோடிகளும் பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தில் இருந்ததாக இந்த திருமணத்திற்கு வந்தவர்கள் கூறினர்.

திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் பிரதீப் திவேதி கூறுகையில், நான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். ஆனால் இதுபோன்ற இரட்டையர்களின் திருமணத்தை நடத்துவது இதுவே முதல் முறை என்றார். இரட்டை சகோதரிகள்  பிறந்ததில் இருந்து தற்போது வரை ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். தற்போதும் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்க உள்ளனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X