2026 மார்ச் 04, புதன்கிழமை

இராணுவ சாதனங்களை ஏற்றுமதி செய்ததில் இந்தியா சாதனை: ராஜ்நாத் சிங்

Editorial   / 2023 ஏப்ரல் 14 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022-2023 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி 15,920 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.12,814 கோடியாக இருந்தது என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

"இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2022-2023 நிதியாண்டில் 15,920 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது நாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனை" என்று சிங் ட்விட்டரில் கூறினார்.

“பிரதமர் திரு நரேந்திரமோடியின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், நமது பாதுகாப்பு ஏற்றுமதி தொடர்ந்து அதிவேகமாக வளரும்,” என்று அவர் கூறினார்.

சிங் வழங்கிய விவரங்களின்படி, இந்தியா 2020-21ல் ரூ.8,434 கோடிக்கும், 2019-20ல் ரூ.9,115 கோடிக்கும், 2018-19ல் ரூ.10,745 கோடிக்கும் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி செய்துள்ளது.

2017-18ல் இந்த தொகை ரூ.4,682 கோடியாகவும், 2016-17ல் ரூ.1,521 கோடியாகவும் இருந்தது.

1,75,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு வன்பொருள் உற்பத்தி மற்றும் 2024-25 ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை ரூ.35,000 கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளில், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .