2026 மார்ச் 05, வியாழக்கிழமை

இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்

Ilango Bharathy   / 2022 மார்ச் 29 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவா முதலமைச்சராகப் பிரமோத் சாவந்த் நேற்று முன்தினம் (28) இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து நடைபெற்ற  புதிய அமைச்சரவையின் முதல் ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட அவர் ” புதிய நிதியாண்டு முதல், 3 இலவச சமயல் எரிவாயு  சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் இரும்புத் தாது சுரங்கத் தொழிலை மீண்டும் ஊக்குவிப்பது மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .