2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காளை மயங்கி விழுந்தது

Freelancer   / 2023 மே 02 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அண்ணா திராவிட முன்னேற் றகழகத்தின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தகாளையை அடக்குவதற்காக ஜல்லிக்கட்டு வீரர்கள்  ஆர்வத்துடன் முன்னேறிக்கொண்டு சென்றனர்.

அப்போது வாடிவாசலில் இருந்து வெளியேவரும் வழியில் வைக்கப்பட்டிருந்த கட்டையின்மீது காளைமோதியது.  இதனால் நிலைக்குலைந்தகாளை, அங்கேயேமயங்கிசரிந்தது. இதையடுத்து உடனடியாக விஜயபாஸ்கரின் காளை மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X