Freelancer / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், 10 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு, உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு, நேற்று புதன்கிழமை ஆட்சியமைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் திகதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு நேற்று புதன்கிழமை ஆட்சியமைத்துள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள சேர்-இ-காஷ்மீர் இன்டர்நேஷனல் கான்வென்டின் சென்டர் (SKICC) இல் வைத்து நேற்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்குபிறகு அரசு அமைத்துள்ளது. உமர் அப்துல்லாவை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago