2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கேரளாவை உலுக்கிய பெண் வைத்தியரின் கொலை

Ilango Bharathy   / 2023 மே 11 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், மருத்துவர் வந்தனா தாஸ் கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.

அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, தலையில் மூன்று முறையும், முதுகில் 6 முறையும் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் வந்தனா தாஸின் படுகொலையைக் கண்டித்து, கேரளா முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர சட்டம் நிறைவேற்றுமாறு முதல்வர் பினரயி விஜயனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .