2026 மார்ச் 07, சனிக்கிழமை

கொரோனா கட்டுக்குள் வரவில்லையெனில் முடக்கம்?

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 09 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மும்பை :

மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் கொரோனா பரவல் 10 நாள்களுக்குள் கட்டுக்குள் வராவிட்டால் முழு ஊரடங்கு அமுல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாள்களாக கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அஸ்லம் ஷேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்பையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்னும் 10 நாள்களுக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை எனில் இறுதி கட்ட நடவடிக்கையாக மும்பையின் ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .