2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சபரிமலை விவகாரம்; பெண்கள் சென்றால் தீட்டா? யார் கூறியது? சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா

Ilango Bharathy   / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

‘சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை‘ குறித்து பிரபலநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ள கருத்தானது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்‘(The Great indian kitchen ) படக்குழுவின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட  ஐஸ்வர்யாவிடம், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதில் அளித்த அவர் ” பெண்கள் சென்றால் தீட்டு ஏற்படுமா? யார் கூறியது? கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கடவுளுக்கு கிடையாது. எந்தக்கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லியிருக்கிறார்களா? இருந்தால் சொல்லுங்கள்.

இவை அனைத்தும்  மனிதர்கள் உருவாக்கியது. நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை. இப்பொழுதும்  கூட ஆணாதிக்கம் இருக்கின்றது என்பது என் கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .