2026 மார்ச் 04, புதன்கிழமை

சார்ஜரில் இருந்து பாய்ந்த மின்சாரத்தால் சிசு மரணம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு சானித்யா எனும் 8 மாத பெண் சிசு உள்ளது.

சம்பவத்தினத்தன்று தம்பதி அலைபேசியை சார்ஜரில் போட்டு,சார்ஜ் ஆனதும் அலைபேசியை எடுத்த தம்பதியினர், பிளக்கில் செருகி இருந்த சார்ஜர் இணைப்பை கழற்றாமல் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் சிசு அந்த சார்ஜர் வயரை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த போது அந்த வயரை தனது வாயில் திணித்து விளையாடியுள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சிசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .