2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

சிக்குண்ட படை வீரர் ஒப்படைப்பு

Freelancer   / 2025 மே 14 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் வசம் சிக்கியிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுமார் 20 நாட்களுக்கும் மேலாக பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தனது கணவரை  மீட்டுத் தருமாறு எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமார் ஷாவின் 7 மாத கர்ப்பிணி மனைவி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கிய பூர்ணம் குமார் ஷா, புதன்கிழமை (14) காலை 10.30 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான நடைமுறை அமைதியாகவும், நெறிமுறைகளின் அடிப்படையிலும் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X