2025 ஜூலை 31, வியாழக்கிழமை

தலைக்கவசம் அணியாதவர்களுக்குப் பெட்ரோல் வழங்கத் தடை

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூரில் ‘தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன சாரதிகளுக்குப்  பெட்ரோல்  வழங்கப்படமாட்டாது‘ என கரூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் நான்கு சக்கர வாகனங்களில் ஆசனப் பட்டி (சீட் பெல்ட் ) அணியாமல் வருபவர்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர்  பிரபுசங்கர் உத்தரவின்படி நேற்றை தினம் முதல்(26)  இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .