2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Freelancer   / 2022 மே 28 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலக புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 

கோடை விடுமுறையையொட்டிய விடுமுறை தினம் என்பதால் திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம் அதிகளவில் காணப்படுகிறது. 

பல்லாயிரக்கணக்கானோர் ஏழுமலையானை தரிசிக்க குவிந்துள்ளதால், தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் வரிசை 5 கிலோ மீற்றர் தூரத்துக்கு நீண்டு கொண்டே செல்கிறது.

இதனால் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை காணப்படுவதுடன், மேலும், இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .