2026 மார்ச் 05, வியாழக்கிழமை

திருப்பதியில் பதற்றம்; அச்சத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நேற்று(02)  நள்ளிரவு 1.10 மணியளவில் இலேசான நிலநடுக்கமொன்று  ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது  ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  இது திருப்பதியில் இருந்து வடகிழக்கே 85 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .