2026 மார்ச் 04, புதன்கிழமை

நம்பிக்கை, மகிழ்ச்சியை பரப்பும் ஆப்-இ-ரவான்

Editorial   / 2023 ஏப்ரல் 10 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ நகரை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான ஆப்-இ-ரவான்    மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மருத்துவமனைகளில் ரம்ழான் மாதத்தில் ஏழைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது. இது கருணை மற்றும் மனிதாபிமானத்தின் அடையாளமாகும்.

பொதுவாக எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனை அல்லது ஹெட்வுன் மருத்துவமனை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என அழைக்கப்படும் ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் உள்ளிட்ட மருத்துவமனைகளில்   இப்தாரின் போது மக்களுக்கு ஆப்-இ-ரவானினால் உணவு வழங்கப்படுகின்றது.

 இது தவிர, ஸ்ரீநகரில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவுகள் வழங்கப்படுகின்ற, ரம்ழான் என்பது முஸ்லிம்களின் தீவிர பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்தின் மாதமாகும், இது இஸ்லாத்தின் நபிகள் நாயகத்திற்கு குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டதை நினைவுகூரும்.

உணவு மற்றும் பானங்கள் விடியற்காலையில் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வழங்கப்பட்டாலும், பகல் நேரங்களில் உணவு எடுக்கப்படுவதில்லை. இது பொதுவாக பிரார்த்தனை, தொண்டு, சமூகம் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கான நேரம் “இந்த முயற்சி ரம்ழான் மாதத்தின் முதல் நாளிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், எங்கள் குழுக்கள் இரண்டு மருத்துவமனைகளுக்கும் சென்று நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களைப் பற்றிய தரவுகளைச் சேகரிக்கின்றன, அதன் பிறகு அதற்கேற்ப நிர்வாகம் செய்யப்படுகிறது, ”என்று இந்த அமைப்பின் நிறுவனர் காலித் புகாரி கூறினார்.

மருத்துவமனைகளில் தரவுகளைச் சேகரித்த பிறகு, சமையல் மற்றும் பொதிகள் செய்யும் ஏற்பாடுகள் இரவு வெகுநேரம் வரை செய்யப்படுகிறது, அதைத் தொடர்ந்து எங்கள் வெவ்வேறு குழுக்கள் அதை தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கின்றன.

இந்த உணவு வழங்கும் செயல்பாடு, துன்பம் மற்றும் வலியின் போது அந்த குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்க எங்களுக்கு உதவியது என்றார் புகாரி,

தனது குழுவுடன் இணைந்து இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் அனைத்து தரப்பு மக்களும் 1500க்கும் மேற்பட்டோருக்கு தினமும் இப்தார் மற்றும் செஹ்ரி உணவுகளை வழங்கி வருகிறார்..

 "கடந்த மூன்று ஆண்டுகளாக, நாங்கள் நோயாளிகளுக்கும் உதவியாளர்களுக்கும் உணவு வழங்குகிறோம்," என்று அவர் கூறினார்.

செஹ்ரி உணவில் காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் மாற்று நாட்களில் கோழிக்கறியுடன் சாதம் இருக்கும் என்றும், இப்தார் பொதிகளில் வாழைப்பழம், தண்ணீர் போத்தல், பேரீச்சம்பழம் மற்றும் ஜூஸ் பக்கற்றுகள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தன்னார்வலர்கள் இப்தார் நேரத்திற்கு பல மணி நேரத்திற்கு முன்பே வந்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். பல தன்னார்வத் தொண்டர்கள் தனது அமைப்பில் இணைந்து பணியாற்றி வருவதாகவும், எதிர்காலத்திலும் மக்களுக்குச் சேவை செய்ய அவர்கள் உறுதிபூண்டிருப்பதாகவும் காலிட் கூறினார்.
 

அவர்கள் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்து வருகின்றனர். "முக்கியமாக மக்கள் இந்த உன்னத நோக்கத்திற்கு பங்களிக்கிறார்கள். நாங்கள் வசதிகளை வழங்குபவர்கள் மற்றும் புனித ரம்ழான் மாதத்தில் இது சிறந்த சேவைகளில் ஒன்றாகும், ”என்று அவர் மேலும் கூறினார்.

புகாரி மேலும் கூறுகையில், மருத்துவமனைகளில் சமூக இப்தாருக்கு இதுபோன்ற ஏற்பாடுகள் இல்லை. "நாங்கள் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளோம், மேலும் எதிர்காலத்தில் இந்த உன்னதமான நோக்கத்தில் மேலும் பலர் இணைவார்கள் என்று நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

"நாங்கள் இதை ரம்ழான் மாதத்தில் தொடர்ந்து செய்து வருகிறோம், தொடர்ந்து செய்வோம்," என்று அவர் கூறினார், பின்னர் அமைப்பு ஸ்ரீநகரில் உள்ள சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுக்காக அபிநந்தன் ஹோம் (நவீன ஆங்கிலப் பள்ளி) சோலினாவில் ஈத் கொண்டாடுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .