Freelancer / 2025 மார்ச் 17 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில், புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், இந்தியாவில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ, இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றிய விவரம்:
இந்தியாவில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்படுத்தி ஒருவர் நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ அல்லது இந்தியாவை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டாலோ, 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், ரூ.1 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
விசா காலம் முடிந்து இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்காணிக்க உதவும் வகையில் ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், வைத்தியசாலைகள் ஆகியவை வெளிநாட்டினர் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.
அதேபோல, இந்தியாவுக்கு பயணியர் வாகனங்களை இயக்கும் சர்வதேச விமான நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள் ஆகியவை தங்களது ஊழியர்கள், பயணிகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது,
“வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், அனைத்து விதமான விசாக்களையும் வெளிநாட்டினருக்கு வழங்க முடியும். குடியுரிமை பிரிவு 167 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு 7 பிரிவுகளின்கீழ் மின்னணு விசாக்களை வழங்க முடியும்.
ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர்கள் ஏற்கெனவே இ-விசா வைத்திருந்தால், இந்தியாவில் உள்ள 6 குறிப்பிட்ட விமான நிலையங்களில் விசாக்களை பெற முடியும்” என கூறியுள்ளனர்.
30 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago