2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

புதிய மசூதி கட்டுமானப்பணிகள் குடியரசு தினத்தன்று ஆரம்பம்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

   அயோத்தி:

அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக புதிய மசூதி கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, புதிய மசூதி கட்டுமான திட்டப்பணி, நேற்றுமுன்தினம்  குடியரசு தினத்தன்று முறைப்படி தொடங்கியது. இந்நிகழ்வின்போது, மசூதி அறக்கட்டளை தலைவர் ஜுபார் அஹமது பாரூக்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். 9 மரக்கன்றுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் நட்டினர்.

மசூதி கட்டுமானப் பணியை மேற்கொள்ள, இந்தோ-இஸ்லாமிய கலாசார கழகம் என்ற அறக்கட்டளையையும் சன்னி வக்பு வாரியம் அமைத்தது.

அறக்கட்டளை செயலாளர் அத்தார் ஹுசைன் கூறுகையில், ‘மசூதி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவதற்கு குடியரசு தினத்தை எங்கள் அறக்கட்டளை தேர்ந்தெடுத்தது. காரணம், 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் நமது அரசியல் சாசனம் அமுலுக்கு வந்தது.

அரசியல் சாசனத்தின் அடித்தளமாக அமைந்த பன்முகத்தன்மைதான், புதியமசூதியின் அடிநாதமும் கூட’ என்றார்.மேலும் அவர், ‘புதிய மசூதி, பாபர் மசூதியை விட பெரிதாக இருக்கும். ஆனால் அதேபோன்ற தோற்றத்தில் அமைந்திருக்காது’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .