Shanmugan Murugavel / 2025 ஜூலை 28 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
புவி கண்காணிப்புக்காக நாஸாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய செயற்கைக்கோள் புதன்கிழமை (30) திகதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் கலாம் நினைவு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றபோதே மேற்படி கருத்தை நாராயணன் வெளிப்படுத்தினார்.
நாராயணன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 35 கிலோ கிராம் ரொக்கெட்டில் தொடங்கி 75 ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் வல்லமையைப் பெற்றுள்ளது.
இஸ்ரோ நடப்பாண்டு 12 றொக்கெட்டுகளை விண்ணில் ஏவ உள்ளது. ரோபோவுடன் கூடிய ககன்யான் ஜி-1 ஆளில்லா செயற்கைக்கோளை டிசெம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்திய விண்வெளி வீரரை றொக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ஆராய்ச்சிகளை இஸ்ரோ முடித்துள்ளது. அப்துல் கலாம் கூறியதுபோல இந்தியா தனது 100ஆவது சுதந்திர ஆண்டில் (2047-ல்) வல்லரசாக மாறும். அப்போது விண்வெளியில் இஸ்ரோ உதாரணச் சான்றாக மாறும்” என்று கூறினார்.
14 minute ago
46 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
54 minute ago