Freelancer / 2025 ஏப்ரல் 18 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வக்பு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 7 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
மேலும், வக்பு வாரியங்கள், கவுன்சில்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த விசாரணை மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, நாடு முழுவதும் கடந்த 8ஆம் திகதி அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago