2026 மார்ச் 07, சனிக்கிழமை

முக்கிய முடிவுகளை 21 ஆம் திகதி வெளியிடுகிறார்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 31 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழகத்தில் வலுவான 3ஆவது அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 21 ஆம் திகதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

மாநாடு அல்லது பொதுக்கூட்டத்துக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. அதனை எங்கு நடத்துவது? என்பது பற்றி கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.அந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் கொள்கைகளை அவர் வெளியிட உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .