2026 மே 14, வியாழக்கிழமை

முன்னாள் முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 05 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசம்;

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் இன்று தனது 89 ஆவது பிறந்தநாளை கொண்டா டுகிறார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்,

  பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,  'ஸ்ரீ கல்யாண் சிங் ஜி அவர்களிடம் பேசியதுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பொதுசேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர்.

ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தியவர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை பெற வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .