Ilango Bharathy / 2022 ஏப்ரல் 07 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரியில், சாவியுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அரச ஊழியர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் பீட்சா கடை நடத்தி வரும் சக்திவேல் என்பவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்பபட்டுள்ளது.
சம்பவதினத் தன்று தனது மோட்டார் சைக்கிளை கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு சென்றதாகவும் திரும்பி வந்து பார்த்த போது வாகனம் திருடப்பட்டிருந்நதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்ததில், முதியவர் ஒருவர் நோட்டமிட்டப்படி சாவியுடன் நின்ற பைக்கை திருடிச்சென்றது பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு அரச ஊழியர் ஸ்டாலினை கைது செய்த பொலிஸார் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
10 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
19 minute ago
2 hours ago