2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ரசாயன ஆலை விபத்தில் உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு

Editorial   / 2025 ஜூலை 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலங்​கானா தலைநகர் ஹைத​ரா​பாத் அரு​கில், சங்​காரெட்டி மாவட்​டம் பாஷமைலாரம் பகு​தி​யில் கடந்த 40 ஆண்டு​களாக சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இங்கு கடந்த ஜூன் 30-ம் திகதி ரியாக்​டர் டேங்க் திடீரென வெடித்​த​தில் 40 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் 33 பேர் படு​கா​யம் அடைந்தனர்.

இறந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தெலங்​கானா அரசு தலா ரூ.1 கோடி​யும், சிகாச்சி நிறு​வனம் தலா ரூ.1 கோடி​யும் நிவாரண​மாக அறி​வித்​தன. மேலும் காயமடைந்​தவர்​களுக்​கும் நிதி உதவி அறிவிக்​கப்​பட்​டது. இந்த கோர விபத்​தில் பலரது உடல்​கள் உருக்​குலைந்து போன​தால் டிஎன்ஏ பரிசோதனை​யில் அடை​யாளம் கண்டு உறவினர்​களிடம் உடல்​கள் ஒப்​படைக்​கப்​பட்​டன.

விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்​ட​மான​தால், இதன் இடி​பாடு​களில் சிக்​கி​யும் பலர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் இடி​பாடு​கள் முற்​றி​லு​மாக அகற்​றப்​பட்​டாலும் இன்​னும் 8 பேரை காண​வில்​லை. இவர்​கள் என்​ன​வா​னார்​கள் என்ற கேள்வி எழுந்​துள்​ளது.இந்​நிலை​யில், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தவர்​களில் 4 பேர் நேற்று பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 44 ஆக உயர்ந்​துள்​ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .