Freelancer / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோடி சமூகம் பற்றி பேசியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) வலியுறுத்துகிறது. ஆனால் ராகுலோ, ‘மன்னிப்புக் கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல’ என்றார்.
இதுகுறித்து சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் கூறுகையில், உத்தவ் சாவர்க்கர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. எனவே, சாவர்க்கர் குறித்து பேசியதற்கு ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது வழக்கு பதிவு செய்வேன் என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago