Freelancer / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை பாந்திரா குர்லாவில் இரண்டு இளம் பெண்களை மோட்டார் சைக்கிளில் முன்னுக்கும் பின்னுக்கும் அமர வைத்த இளைஞன் மின்னல் வேகத்தில் பறந்து சாகசம் செய்தார்.
மோட்டார் சைக்கிளின் முன்சக்கரத்தை மேலே தூக்கியவாறு 'வீலிங்' சாகசம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். வாலிபரின் விபரீத சாகசத்துக்கு 2 இளம்பெண்களும் ஈடுகொடுத்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் இளைஞனை உடும்பு போல கட்டிப்பிடித்து தொற்றி கொண்டனர்.

இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை 'லைக்' தெரிவித்து உள்ளனர். விபரீத சாகசம் செய்த இளைஞன், அவருடன் திகில் பயணம் செய்த இளம்பெண்கள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .