Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2012 ஜனவரி 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (01.02.2012)
மேடம்
தூய்மையான ஆடை அணிதல், இதனால் உற்சாகம். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல்.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
அனாவசிய பேச்சுக்களால் பிரச்சினைகள், வீண் அலைச்சல், செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: பயம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்
மிதுனம்
உறவினர் மற்றும் நண்பர்கள் வருகை, இதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் நிலை உருவாகும், செலவுகள் அதிகமாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தனலாபம்
புனர்பூசம்: தொடர்புகள்
கடகம்
உண்ணும் உணவில் வெறுப்பு காணப்படும். இதனால் வீணான மருத்துவ செலவுகள் ஏற்படும். இதனால் உடல் நலம் பாதிப்படையும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: துக்கம்
ஆயில்யம்: வெறுப்பு
சிம்மம்
அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடைய வருகை நல்ல மகிழ்ச்சியைக் கொடுக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
கன்னி
வேண்டாதவர்களுடைய நட்புக்கள் கிடைக்கப்பெறுவீர்கள். இதனால் தொழிலில் நட்டம் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் தோன்றும். எனவே நண்பர்கள் விடயத்தில் கவனத்துடன் இருப்பது அவசியம்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: நட்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துக்கம்
துலாம்
பொன், பொருள் ஆகியவை சேர்க்கை நடைபெறும். இல்லத்தில் உறவினர்களின் வருகை காணப்படும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடுவீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம:; மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: செலவு
விருட்சிகம்
வேண்டாத பேச்சுகளால் வியாபாரத்தில் நட்டம் மற்றும் மனக்கஷ்டங்களை அடைய நேரிடும். எனவே வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். தீயவர்களின் நட்புக்களை தவிர்ப்பது அவசியம்.
விசாகம் 4: துக்கம்
அனுசம்: துன்பம்
கேட்டை: நட்டம்
தனுசு
செய்யும் செயல்களில் அரசினரால் ஆதாயம் கிடைக்கும். தொழிலில் தனலாபம் கிட்டும். காரியத்தில் வெற்றிகள் தேடி வரும்.
மூலம்: வெற்றி
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
மகரம்
பெண்களுடன் விவாதங்கள் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும். மற்றவர்களினால் பிரச்சினைகள் காணப்படும். துன்பங்களை அடைய நேரிடும்.
உத்திராடம் 2, 3, 4: சிக்கல்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: துக்கம்
கும்பம்
மகிழ்ச்சியான செய்திகள் நம் இல்லம் தேடி வரும். வியாபாரத்தில் புதிய வழிகள் பிறக்கும். இதனால் இலாபமும் மகிழ்ச்சியும் கிட்டும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்
மீனம்
செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்பட்டு காரியங்கள் தடைபடும். திருட்டு போவது இதனால் பயம் வீண் அலைச்சல் ஆகியவைகள் உண்டாகும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: தடை
ரேவதி: துன்பம்
17 minute ago
22 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
27 minute ago
33 minute ago