2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (17.09.2013)

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (17.09.2013)
 
மேடம்
வயது மூத்தோர்களின் ஆசீர்வாதம் மற்றும் மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். வேண்டாத உணவால் வயிற்றில் பிரச்சினைகள் உண்டாகும்.
அஸ்வினி : துன்பம்
பரணி : கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
இடபம்
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணத்திற்கு பிரச்சினைகள் உண்டாகும். அலைச்சல்கள் காணப்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: வெற்றி
 
 
மிதுனம்
பெண்களுடன் விவாதங்கள் ஏற்படும். மற்றவர்களால் பிரச்சினை உண்டாகும். துன்பங்களை அடைய நேரிடும். குழப்பம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
மிருகசீரிடம் 2, 3: துக்கம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: குழப்பம்
 
 
கடகம்
வியாபாரத்தில் புதிய உக்திகளை செலுத்தி வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். சுற்றத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையினால் மகிழ்ச்சி நிலவும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : தனலாபம்
ஆயில்யம் : மகிழ்ச்சி
 
 
சிம்மம்
முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். அதிக பணலாபம் உண்டாகும். வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் சூழ்நிலைகள் உருவாகலாம்.
மகம்: வெற்றி
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: பயணம்
 
 
கன்னி
நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். நல்லவர்களுடைய சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். தனலாபங்கள் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
 
 
துலாம்
உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். மனதில் குழப்பங்கள் தோன்றும், துக்கம் நிலவும். மற்றவர்களினால் பிரச்சினை உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: தோல்வி
 
 
விருட்சிகம்
வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபமடையும் சூழல் உண்டாகும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல், பொன், பொருள் சேர்க்கை ஆகியவை கிடைக்கும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: லாபம்
 
 
தனுசு
வியாபாரம் சம்மந்தமாக வெளியூர் செல்லும் நிலை ஏற்படும். தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் பாதிப்புகள் காணப்படும். மனதளவில் பயம் தோன்றும்.
மூலம்: துன்பம்
பூராடம்: பயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
 
 
மகரம்
அரசினரால் ஆதாயம் கிடைக்கும். நல்ல இனிமையான உறக்கம் கிடைக்கும். காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். இதனால் தனலாபம் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2 : இன்பம்
 
 
கும்பம்
புண்ணிய செய்திகள் கேட்கும் நிலை உருவாகும், இதனால் மனம் அமைதியடையும். வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அவிட்டம் 3, 4: தரிசனம்
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்
 
 
மீனம்
வியாபாரத்தில் புதிய வழிகளை கையாண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உருவாகும். இதனால் லாபங்கள் உண்டாகும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி : லாபங்கள்
ரேவதி : முன்னேற்றம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .