2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஆடைகளை திருடிய எம்.பி இராஜினாமா

Mayu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தக நோக்கத்திற்காக ஆடைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

நியூசிலாந்தின் மத்திய-இடது பசுமைக் கட்சியின் உறுப்பினர் கோல்ரீஸ் கஹ்ராமன், ஆடைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இராஜினாமா செய்தார்.

நியூசிலாந்துக்கு அகதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் எம்.பி., கோல்ரிஸ் ஆவார்.

43 வயதான அவர் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் மனித உரிமைகளுக்காக வாதிடுபவராவார். ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகளுக்காக வாதிட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

ஓக்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர சில்லறை விற்பனையாளரிடமிருந்து ஆடைகள் திருடப்பட்டது தொடர்பான பொலிஸாரின் விசாரணைக்குப் பிறகு, பதவி விலக கோல்ரிஸின் முடிவு செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டபோது ஆடைகளைத் திருடியதை கோல்ரீஸ் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தவறு என்று தெரிந்தும், அந்த மன அழுத்த சூழ்நிலையை போக்கவே அவ்வாறு செய்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X