2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்: 50 பேர் பலி

Freelancer   / 2022 ஏப்ரல் 30 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் பள்ளிவாசல் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 50 இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த சம்பவத்தில் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும்  ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரகம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .