2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இந்தியாவில் 11 பேர் பலி; 90 பேர் வைத்தியசாலையில்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஆலயமொன்றில் வழங்கப்பட்ட உணவை உண்ட 11 பேர் உயிரிழந்ததோடு, 90க்கும் மேற்பட்டோர், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். உணவு நஞ்சானதன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டது என நம்பப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஆலயமொன்றில் வைத்து, தக்காளிச் சாதம் வழங்கப்பட்டது எனவும், அதன் பின்னரே வாந்தி, வாந்திபேதி, சுவாசப் பிரச்சினைகள் ஆகியவற்றுடன், பொதுமக்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

உணவில், பூச்சிகொல்லி கலந்ததன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டது என சில தகவல்கள் தெரிவித்தாலும், அதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X