2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இனி 4 நாட்கள் மட்டுமே வேலை

Mithuna   / 2024 ஜனவரி 31 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை ஜெர்மனி மேற்கொள்ளவிருக்கிறது. உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றன. இந் நிலையில் ஜெர்மனியும் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்க உள்ளது.

அதன்படி வியாழக்கிழமை (01) முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை தானாம். இதனை கடைபிடிப்பதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி அரசு எதிர்பார்க்கிறது.

இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அந்நாட்டில் உள்ள பல தொழிலாளர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இந் நிலையில் அமலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நல்ல பலனை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன.

இதில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த சோதனை அடுத்த 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X