2026 மே 14, வியாழக்கிழமை

இனிமேல் பிசிஆர் செய்யத் தேவையில்லை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 18 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசியினைச் செலுத்திக் கொள்ளாத மக்கள் இனிமேல் பிசிஆர் பரிதோதனையைச் செய்யத்  தேவையில்லை என துருக்கி அரசு அறிவுத்துள்ளது.

துருக்கியில் இதுவரை நாடக மேடைகள், திரையரங்குகள், பஸ்கள், அரங்குகள், உள்நாட்டு விமான சேவைகள், ரயில் சேவைகள்  என பெரும்பாலான இடங்களில்  பிசிஆர் சோதனை முடிவுகளைக்  கட்டாயம் காட்ட வேண்டும்  என்ற விதிமுறை காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த விதிமுறையை துருக்கி அரசாங்கம் தற்போது நீக்கியுள்ளது.

அதேபோல் தனியார் துறை மற்றும் பொது துறை ஊழியர்கள் பணிக்கு செல்லும் போது இனி கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியானது அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .