2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

Freelancer   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருப்​பதாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இஸ்​ரேல் ராணுவம் மற்​றும் காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 2 ஆண்​டு​களாக போர் நீடித்து வரு​கிறது. இந்த போருக்கு முற்​றுப்​புள்ளி வைக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 20 அம்ச திட்​டத்தை முன்​மொழிந்​துள்​ளார். 

போரி​னால் பாதிக்​கப்​பட்​டுள்ளகாசா மீண்​டும் கட்டி எழுப்​பப்​படும். அந்த பகு​தி​யில் இருந்து தீவிர​வாதம் அகற்​றப்​படும். ஹமாஸ் குழு​வின் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடி​யாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும். உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்ட பிறகு காசா​வில் இருந்து இஸ்​ரேல் ராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும்.

ஹமாஸ் குழு​வினர் ஆயுதங்​களை கைவிட வேண்​டும். அவர்​களுக்கு பொது மன்​னிப்பு வழங்​கப்​படும். காசா​வில் இருந்து அவர்​கள் பாது​காப்​பாக வெளி​நாடு​களில் குடியேறலாம். காசாவை நிர்​வகிக்க உள்​ளூர் தலை​வர்​கள் அடங்​கிய புதிய குழு அமைக்​கப்​படும். இந்த குழு​வில் ஹமாஸ் தலை​வர்​களுக்கு இடம் கிடை​யாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரிட்​டிஷ் முன்​னாள் பிரதமர் டோனி பிளேர் உள்​ளிட்​டோர் அடங்​கிய சர்​வ​தேச குழு​வின் வழி​காட்​டு​தலின்​படி புதிய குழு காசாவை நிர்​வகிக்​கும். காசா​வில் சிறப்பு பொருளா​தார மண்​டலம் உரு​வாக்​கப்​படும்.சர்​வ​தேச முதலீடு அதி​கரிக்​கப்​படும். வேலை​வாய்ப்​பு​கள் பெருக்​கப்​படும். ஐஎஸ்​எப் என்ற சர்​வ​தேச படை காசா​வில் பாது​காப்பு பணியை மேற்​கொள்​ளும் என்பன உள்​ளிட்ட திட்​டத்தை ட்ரம்ப் அறி​வித்​திருக்​கிறார்.

இதுதொடர்​பாக எகிப்​தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே நேற்று முன்​தினம் அமை​திப் பேச்​சு​வார்த்தை தொடங்​கியது. இஸ்​ரேல் அரசின் மூத்த அமைச்​சர் ரோன் டெர்​மர் தலை​மையி​லான குழு, ஹமாஸ் மூத்த தலை​வர் காலில் அல் ஹையா தலை​மையி​லான குழு பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இரு தரப்புக்கும் இடையே 2-வது நாளாக நேற்​றும் பேச்​சு​வார்த்தை நீடித்​தது. அமெரிக்​கா​வின் சிறப்பு தூதர் விட்​காப் மற்​றும் ஜனாதிபதி ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் இன்​றைய பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க உள்​ளனர். அப்​போது முக்​கிய உடன்​பாடு எட்​டப்​படலாம் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையி​லான பேச்​சு​வார்த்​தை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருக்​கிறது. ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக்​கை​தி​களை விடு​தலை செய்​து, உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை ஒப்​படைத்​து​விட்​டால் உடனடி​யாக போர் நிறுத்​த ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகும்​" என்​று தெரி​வித்​தன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X