2026 மார்ச் 07, சனிக்கிழமை

ஈரானிய மாலுமிகளை நாடுகடத்த வேண்டாமென இலங்கைக்கு அமெரிக்க அழுத்தம்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவானது தாம் இவ்வாரம் மூழ்கடித்த ஈரானிய போர்க்கப்பலில் உயிர் தப்பியவர்களையும் இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டாவது ஈரானியக் கப்பலின் மாலுமிகளையும் நாடு கடத்த வேண்டாமென இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக றொய்ட்டர்ஸால் வெள்ளிக்கிழமை (06) பார்வையிடப்பட்ட உள்ளக இராஜாங்கத் திணைக்களத்தின் கேபிள் வெளிப்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை (06 திகதியிடப்பட்ட கேபிளில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்துக்கு பொறுப்பான ஜேய்ன் ஹொவெல், பூஷெர் கப்பலின் மாலுமிகளோ அல்லது டெனாவில் உயிர் தப்பிய 32 பேரோ ஈரானுக்கு நாடுகடத்தப்படக்கூடாதென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டவர்களை பிரசாரமாகப் பயன்படுத்தும் ஈரானிய முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் குறைக்க வேண்டுமெனவும் கேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாலுமிகளை ஈரானுக்கு நாடுகடத்தும் எதுவிதத் திட்டமுமில்லை என இந்தியா மற்றும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவரிடம் ஹொவெல் கூறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாலுமிகளை ஈரானிய அரசாங்கத்துக்கு எதிராகத் திரும்ப ஊக்கமளிக்க ஏதாவது தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டதா என ஹொவெலை இஸ்ரேலியத் தூதுவர் வினவியுள்ளார்.

டெனாவில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை நாடுகடத்துவதற்கு இலங்கையை உதவுமாறு ஈரான் கோரியதாக இலங்கையின் பிரதி ஊடக அமைச்சர் ஹன்சக விஜேமுனி றொய்ட்டர்ஸிடம் புதன்கிழமை (04) கூறியிருந்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .