Shanmugan Murugavel / 2026 மார்ச் 17 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானுடன் போருக்குச் செல்லுமாறு ஐக்கிய அமெரிக்காவை வளைகுடா அரபு நாடுகள் வினவாதபோதும், வளைகுடாவின் எண்ணெய் உயிர்நாடியையும் அதில் தங்கியுள்ள பொருளாதாரங்களையும் இன்னும் ஈரான் அச்சுறுத்தும் வகையில் விடாமல் போரைக் குறுக்கிக் கொள்ள வேண்டாமென பல வலியுறுத்துவதாக வளைகுடா தகவல் மூலங்கள் மூன்று வலியுறுத்துவதாக றொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேநேரம் போரில் இணையுமாறு வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் இந்த மூன்று தகவல் மூலங்களும் ஐந்து மேற்குலக மற்றும் அரேபிய இராஜதந்திரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஆறு வளைகுடா நாடுகளின் விமானநிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் வசதிகள், வர்த்தக நிலையங்களை ஈரான் ஏற்கெனவே ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளதுடன், உலகின் ஐந்திலொரு பங்கு எண்ணெய் செல்கின்ற ஹொர்முஸ் நீரிணையூடான கப்பல் போக்குவரத்தையும் குழப்புகிறது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago