2026 மே 09, சனிக்கிழமை

உலக வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Ilango Bharathy   / 2022 மார்ச் 10 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் – ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போரானது 14 நாட்களைக் கடந்து  நீடித்து வருகின்றது.

இம் மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் இழப்புக்களும்,பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 அத்துடன் உக்ரேனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதால் அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

மேலும் போரை நிறுத்தும்படி அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும்  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில்,  உக்ரேனுக்கு உதவும் வகையில் உலக வங்கி அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் உக்ரேனில் பொருளாதார அவசர நிலையை மீட்பதற்கான 723 மில்லியன் டொலர்கள் கடனுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .