Editorial / 2025 ஜூலை 21 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒமாவை எஃப்பிஐ அதிகாரிகள் ஓவல் அலுவலகத்தில் கைது செய்வதை சித்தரிக்கும் ஏஐ வீடியோவைப் பகிர்ந்து பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
இந்த வீடியோ டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோசியல் சமூக ஊடக தளத்தில் வெளியிடப்பட்டது, இது அரசியல் ரீதியாக எதிர்விளைவைத் தீவிரப்படுத்தியது. டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை பொறுப்பற்ற செயல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கை என்று விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ டிரம்பின் கீழ் தற்போதைய தேசிய புலனாய்வு இயக்குநரான துளசி கப்பார்டின் பரபரப்பு குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வந்துள்ளது.
2016 தேர்தல் முடிவை பாதிக்கும் முயற்சியில் ஒபாமாவும் மூத்த உளவுத்துறை அதிகாரிகளும் டிரம்ப்-ரஷ்யா கூட்டுக் கதையை ஜோடித்ததாகக் கூறும் 100 க்கும் மேற்பட்ட ஆவணங்களை துளசி கப்பார்ட் வெளியிட்டார்.
ஒபாமா பதவி விலகுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தேசத்துரோக சதி என்று அவர் இதை விவரித்தார்.
ரஷ்யா அமெரிக்காவின் தேர்தலை பாதிக்கும் நோக்கமும் திறனும் இரண்டையும் கொண்டிருக்கவில்லை என்ற முந்தைய மதிப்பீடுகளுக்கு முரணாக, டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்ய தலையீட்டை தவறாகக் கூறுவதற்காக உளவுத்துறை சிதைக்கப்பட்டதாக கப்பார்ட் குற்றம் சாட்டுகிறார்.
டிரம்பின் ஜனாதிபதி பதவியை சட்டவிரோதமாக்குவதற்கான பல வருட முயற்சிக்கு இந்த புனையப்பட்ட கதை அடித்தளமிட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago