2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஒவ்வொரு 4 நொடிக்கு ஒருவர் பட்டினியால் மரணம்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 22 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வத்  தொண்டு நிறுவனங்கள் உலகளாவிய பசி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி  அண்மையில் ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
 
குறித்த ஆய்வில்  45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகளாவிய பசி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி மேற்கொண்ட  ஆய்விலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் குறித்த ஆய்வில்”21ம் நூற்றாண்டில் மீண்டும் பஞ்சத்தை அனுமதிக்க முடியாது என்ற உலக தலைவர்கள் வாக்குறுதி அளித்தாலும் சோமாலியாவில் இன்று பஞ்சம் மீண்டும் நெருங்கி விட்டது.உலகம் முழுவதிலும் 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். அதிலும் 345 மில்லியன் மக்கள் தற்போது கடுமையான பசியை அனுபவித்து வருகிறார்கள்.
 
இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. மேலும் பட்டினியால் நாள் ஒன்றிற்கு 19,700 பேர் இறப்பதுடன் ஒவ்வொரு நான்கு நொடிக்கும் ஒருவர் உயிரிழக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X