2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

குரங்கின் மீது பொலிஸ் நிலையத்தில் புகார்

Ilango Bharathy   / 2022 ஜூலை 24 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


குரங்கொன்றின் மீது மக்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த விநோத சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது ஜப்பானில்  உள்ள யமக்குச்சி மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் ஓகோரி என்ற பகுதி அமைந்துள்ளது.

குறித்த பகுதியில் அண்மையில் வீடொன்றில் உறங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை குரங்கொன்று கடுமையாகத் தாக்கியுள்ளது. அத்துடன் அப்பகுதியில் இருந்த 2 சிறுமிகள் உட்பட பலரையும் அக்குரங்கு கொடூரமாகத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக பொலிஸாருக்குப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் குரங்கை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குரங்கை கண்டுபிடிக்கும் வரையில் பொதுமக்கள் யாரும் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைக்க வேண்டாம் எனவும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .