Freelancer / 2024 ஜூன் 27 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கென்யாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி இதுவரையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்திரளானோர் காயமடைந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு தீ வைத்து செங்கோலையும் எடுத்துச்சென்றுள்ளனர்.
புதிய வரி விதிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சர்ச்சைக்குரிய நிதி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிய நிதி சட்டமூலத்திற்கு அமைய பல அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருள்களுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டமையே கென்ய ஆர்ப்பாட்டத்திற்கான காரணமாகும்.
சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரகசிய பதுங்கு குழி வழியாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கென்யாவின் நைரோபி நகரில் பல நாள்களாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (a)

14 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago