Editorial / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தகுதியை இழந்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ உச்ச நீதிமன்றம் இது குறித்த தீர்ப்பினை அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசியல் அமைப்பின் பிரகாரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசியல் அமைப்பின் 14ஆம் திருத்தச் சட்டத்தின் 3ஆம் பிரிவின் பிரகாரம் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாக ட்ரம்ப் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற கலவரத்துடன் ட்ரம்ப் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பதவிப் பிரமாணத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் வகையில் ட்ரம்ப் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதேவேளை, ட்ரம்பிற்கு எதிரான தீர்மானம் குறித்து ஜனாதிபதி வேட்பாளரான விவேக் ராமசாமி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்றின் இந்த தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago