2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாய்வானைப் பாதுகாக்க படையைப் பயன்படுத்த தயார்: பைடன்

Shanmugan Murugavel   / 2022 மே 24 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானைப் பாதுகாக்க படையைப் பயன்படுத்த வேண்டியேற்படும் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாய்வானை நோக்கி ஐக்கிய அமெரிக்க கொள்கையில் ஒரு மாற்றமுல்லை என ஜனாதிபதி பைடனின் உதவியாளரொருவர் தெரிவித்துள்ளார்.

தான் பதவியேற்ற பின்னர் ஜப்பானுக்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொள்கையில், ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடா பார்த்துக் கொண்டிருக்கையிலேயே குறித்த கருத்தை ஜனாதிபதி பைடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தாய்வானின் சுதந்திரத்தை ஐக்கிய அமெரிக்கா பாதுகாக்கக் கூடாதென சீனாவின் வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .