Ilango Bharathy / 2022 மார்ச் 13 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது மீண்டும் தீவிரமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் தொழில்துறை நகரமான சாங்சுன்னில் (Changchun ) கொரோனோத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததையடுத்து அப்பகுதியில் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசியமான காரணங்கள் இல்லாமல்மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 9 மில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நகரில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற வணிக மற்றும் போக்குவரத்து இணைப்புகளையும் அதிகாரிகள் இடைநிறுத்தம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago