2025 மே 17, சனிக்கிழமை

திருடியதால் நால்வரின் கைகள் துண்டிப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 22 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

அத்துடன் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனைகளையும் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் காந்தஹாரில் உள்ள அகமது சாஹி காற்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில்திருட்டில் ஈடுபட்ட நால்வரின் கைகளை தலிபான்கள் துண்டித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதன்போது பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு 39 கசையடிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முறையான விசாரணை ஏதுமின்றி மக்களுக்கு கொடூர தண்டனைகளை தலிபான்கள் வழங்கி வருவதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .