2026 மே 14, வியாழக்கிழமை

தீய கடன் பொறிக்குள் சிக்குமா சிரியா?

Freelancer   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரக்தியிலுள்ள சிரியா, தனது பொருளாதாரத்தை புதுப்பிக்க சீனாவின் பட்டுப் பாதை முன்முயற்சியில் சேர்ந்துள்ளது என்றும் அது போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை, பல நாடுகளைப் போலவே தீய கடன் பொறிக்குள் இட்டுச் செல்லக்கூடும் எனவும் தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து அதன் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான சரிவை மாற்றியமைக்க சிரியா சீனாவிடம் இருந்து நிதியை நாடுகிறது. 

இருப்பினும், பீஜிங்கின் வாக்குறுதிகள் பெரியதாக இருப்பதால், சீனாவுடன் கைகோர்ப்பது ஆபத்துகளை ஏற்படுத்தும் எனவும் நிதியுதவி மற்றும் செயல்பாடு ஆகியவை மெதுவாக உள்ளன என்றும் தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸின் விரக்தியை சீனா ஊக்குவிக்கிறது, ஏனெனில் இது மத்திய கிழக்கில் சீனா தனது கால்தடங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் உள்ளது. 

சிரியா மத்தியதரைக் கடலுக்கான ஒரு தாழ்வாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால், சீனாவின் ரேடாரின் கீழ் உள்ளது. இது சுயஸ் கால்வாயைக் கடந்து சீனாவை ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய கண்டங்களுடன் இணைக்கிறது.

சிரியப் பொருளாதாரம் போரினால் பேரழிவுக்கு உள்ளானதுடன், 120 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உட்கட்டமைப்பு பாரிய அழிவைக் கண்டுள்ளது.

ஐ.நா மதிப்பீட்டின்படி, போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் 250-400 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

சீனாவின் இந்த பட்டுப் பாதை முதலீடுகள் அதன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதாக சிரியா எண்ணினாலும், தற்போதைய சூழ்நிலையில் டமாஸ்கஸால் கடனைச் செலுத்த முடியாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .