Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மே 03 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு எமிரேட்டில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பாலைவன நகரமான துபாயில் கடந்த மாதம் 14ஆம் திகதி கன மழை கொட்டி தீர்த்தது. 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் பலத்த மழை பெய்தது. ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் துபாயில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. ஓமனிலும் மழை பெய்ததில் 18 பேர் பலியாயினர். இந்த மழை பெய்து 2 வாரங்கள் ஆன நிலையில் துபாயில் நேற்று மீண்டும் மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக விமான சேவை, நகரின் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்படும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக எமிரேட் ஏர்லைன்ஸ் நிறுனம் அறிவித்துள்ளது. S
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago