2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

நேபாளத்தில் அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்

Freelancer   / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நே​பாளத்​தில் அரசுக்கு எதி​ராக வெடித்த கலவரத்​தால் பதற்​றம் நீடிக்​கும் நிலை​யில், அரசி​யல்​வா​தி​களை குறி​வைத்து தாக்​குதல்​கள் நடக்​கின்​றன. 

காத்​மாண்​டு​வில் உள்ள சிங்கா அரண்​மனை எனப்​படும் பிர​மாண்​ட​மான அரசு மாளி​கை, இளைஞர்​கள் வைத்த தீயின் காரண​மாக கரு​கியது. அதில் இருந்த விலை உயர்ந்த பொருட்​கள், ஆவணங்​கள் அனைத்​தும் நாச​மா​கின.

நேபாளத்​தில் அமைதி திரும்​பாத நிலை​யில், பல்​வேறு நகரங்​களில் ஊரடங்கு உத்​தரவு அமலில் உள்​ளது. காத்​மாண்டு முழு​வதும் பொலிஸாரும், இராணுவத்​தினரும் குவிக்​கப்​பட்​டு, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்​.

நே​பாளத்​தில் நில​வும் அசா​தாரண சூழலைத் தொடர்ந்​து, காத்​மாண்டு சர்​வ​தேச விமான நிலை​யம் மறுஅறி​விப்பு வரும்​வரை மூடப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. 

நேபாளத்தில் இளைஞர்​கள் ஒன்று திரண்டு ஜனாதிபதி, பிரதமர், அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோரின் வீடு​களை குறி​வைத்து தாக்கி வரு​கின்​றனர். பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை இராஜி​னாமா செய்​து​விட்​டு, இராணுவத்​தின் கட்டுப்​பாட்​டில் உள்ள பகு​திக்கு ஹெலி​கொப்​டரில் தப்​பிச் சென்​றுள்​ளார்.

முன்​னாள் பிரதமர்​கள் பிரசண்​டா, ஷெர் பகதூர் தேவ்​பா, சாலா​நாத் கனால், அமைச்​சர்​கள், மூத்த அரசி​யல் தலை​வர்​களின் வீடு​களுக்கு போராட்​டக்​காரர்​கள் தீ வைத்​தனர். இதில் ஷெர் பகதூர் தேவ்பா மற்​றும் அவரது மனைவி ஆகியோர் காயங்​களு​டன் தப்​பினர். முன்​னாள் பிரதமர் சாலா​நாத்கனாலின் மனைவி ராஜலட்​சுமி உயிருடன் எரித்துக் கொல்​லப்​பட்​டார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .