2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

“நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் தேவை”

Mithuna   / 2024 பெப்ரவரி 22 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன்-ரஷ்யா போர் கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அவற்றின் உதவியால் போரில் உக்ரேன் தாக்குப்பிடித்து நிற்கிறது.

இந் நிலையில் போரால் உருக்குலைந்துள்ள உக்ரேனை மறுசீரமைப்பது தொடர்பான மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.

இதில் உக்ரேன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ரஷியாவுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரேனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள் அதிகளவில் தேவைப்படுகிறது. அதேசமயம் ஆயுத ஏற்றுமதி கொள்கையில் ஜப்பானின் கட்டுப்பாடுகளை உக்ரேன் புரிந்து கொள்கிறது. எனவே அமெரிக்காவின் புதிய இராணுவ உதவிகளை உக்ரேன் எதிர்பார்க்கிறது” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X