2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நெருப்பு குழம்பை கக்கும் எட்னா எரிமலை

Editorial   / 2022 மே 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கண்டத்திலுள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா, இத்தாலியில் சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. இந்த எரிமலை, கடந்த காலங்களில்   பலமுறை வெடித்துள்ளது. கடந்த மாத இறுதியில் கரும்புகையை வெளியிட்டு வந்த எட்னாவில் தற்போது சீற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. எரிமலையின் முகப்பு பகுதியில் இருந்து லாவா எனப்படும் நெருப்பு குழம்பும், சாம்பலும் வெளியாகி வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுவட்டாரங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சில நாட்களுக்கு   வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது இரவு நேரங்களில் எரிமலையில் இருந்து லாவா நெருப்பு குழம்பாக பாய்வதை தூரத்தில் இருந்தபடி சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். எட்னா எரிமலை எடுத்த சில நாட்களுக்கு எரிமலை குழம்பை வெளியிடும் என்று தெரிவிக்கும் இத்தாலி நிலவியல் அதிகாரிகள், எரிமலை சீற்றத்தை 24 மணி நேரமும் நிபுணர்கள் கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .