Janu / 2026 மார்ச் 01 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயத்துல்லா அலி கமேனியின் கொலையை "ஒரு பாரிய குற்றம்" என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் கண்டித்துள்ளார். மேலும் இதற்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அவரது அலுவலக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இந்த மாபெரும் குற்றத்திற்கு ஒருபோதும் பதிலளிக்கப்படாமல் போகாது, தலைவரின் தூய இரத்தம் ஒரு கர்ஜிக்கும் நீரூற்று போலப் பாயும், மேலும் இஸ்லாமிய உலகம் மற்றும் ஷியா மதத்தின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பும். இந்த மாபெரும் குற்றத்தைச் செய்தவர்களையும் தளபதிகளையும் வருத்தப்பட வைப்போம்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஈரானிய உச்ச தலைவர் கமேனியின் மரணத்திற்குப் பிறகு, ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனே இடைக்கால ஈரானின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
25 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago