2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பஸ் தரிப்பிடம் அருகே வெடி குண்டுத் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஜூன் 02 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மார் யங்கூன் நகரில் பஸ் தரிப்பிடம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்று முன்தினம் (31) இடம்பெற்ற இக் குண்டு வெடிப்பில் 10 பேருக்கும் மேற்பட்டோர்  படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் சம்பவ இடத்தில் இருந்து வெடிக்காத குண்டு ஒன்றைப் பாதுகாப்பு வீரர்கள் பறிமுதல் செய்தனர்.   
மியன் மாரியில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றது. 
 
இந்நிலையில் இராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பொன்றே குறித்த தாக்குதல் நடத்தியதாக மியன்மார் பாதுகாப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. 
 
எனினும் எந்த அமைப்பும் இதுவரை இத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .